tamilnadu

img

ப.சிதம்பரத்தின்  நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

புதுதில்லி:
ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐ. என். எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  கைது செய்யப்பட்டமுன்னாள்  மத்திய நிதிமைச்சர் ப.சிதம்பரம் தற்போது நீதிமன்றகாவலில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.   ப.சிதம்பரத்தின் நீதிமன்றக்காவல்  அக்டோபர் 3 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் தில்லி சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம்  ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து,
சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை அக்டோபர் 17ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

;